என்னைத் தெரிந்துகொள்ள

ஞாயிறு, 20 மே, 2012

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி





 
  சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்காய், ஜாதி, மத, மூட நம்பிக்கைகளை தன் புரட்சி பேச்சால் புரட்டி எடுத்த புரட்சியாளன் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. தந்தை பெரியாரின் சுயமரியாதை பயணத்தில் தளபதியாக பயணித்தவர்.

ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்கு தன் மேடைப் பேச்சால் அறை கொடுத்தவர் அழகிரி. தன் பேச்சால் பல்வேறு வழிகளில் பயணித்தவர்களையும். பயணிக்க நினைத்தவர்களையும் சுயமரியாதை இயக்கம் நோக்கி இழுத்து வந்தவர். அப்படி வந்தவர்களில் முதல்வர் கலைஞரும் உண்டு. எதிரிகளின் கல்லடி, சொல்லடி, செருப்படி என்று எதைக் கண்டும் அஞ்சாமல் கடைசிவரை சுயமரியாதைக்காக, சுயமரியாதையாக வாழ்ந்தவர்.


            இன்றைய புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், வாலடை மருதூர் கிராமத்தில் வளர்ந்தார். பத்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவர் முதலாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

            ஆறு ஆண்டுகள் ராணுவ பணி செய்தார். ராணுவப் பணியின் போது மெசபடோமியாவில் இவர் உள்ளிட்ட இந்திய ராணுவ வீரர்களை கடும்; பனிகாரணமாக இங்கிலாந்து படை விட்டு விட்டு திரும்பிவிட்டது. கவலைப்படாமல் கடல்வழியாக கொல்கத்தா வந்து சேர்ந்து அத்துடன் ராணுவ பணிக்கு முழுக்கு போட்டார். ஊர் திரும்பியவருக்கு பட்டுக்கோட்டை சுயமரியாதை பயணவழிகள் செய்து கொடுத்துது. 

            கூட்டுறவு சங்கமொன்றில் எழுத்தராக சேர்ந்தார். அந்த சமயம் சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யர் நடத்திய குருகுலத்தில் பிராமண மாணவர்கள், பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு தனித்தனி குடிதண்ணீர் பானைகள் வைக்கப்பட்டிருந்தது.

            பிராமணரல்லாத மாணவர் பிராமணர்களுக்கான பானைத் தண்ணீரை குடித்து விட அந்த மாணவரை அடித்து தண்டித்தது குருகுலம். அப்படிப்பட்ட குருகுலத்துக்கு அன்றைய காங்கிரஸ் ரூ.ஒரு லட்சம் நிதி கொடுத்தது. குருகுலத்தின் தீண்டாமை போக்கை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை என்று பெரியாரும், சீர்த்திருத்த கருத்து கொண்ட காங்கிரஸில்; பலரும் கொதித்தெழுந்தனர். ஆனால் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த வரதராஜுலு நாயுடு தமிழ்நாடு நாளிதழில் காரசாரமாக எழுதி பிராமணர்களின் போக்கை கண்டித்தார்.

            ரிவோல்ட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்களாக இருந்த பெரியார், ராமநாதன், குத்தூசி குருசாமி ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.

            அந்த வழக்கு நீதிமன்றம் போனது. ஆதில் அழகிரிக்காக வழக்கறிஞராக ம.சிங்காரவேலர் ஆஜரானார்.

            ஆழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.

            இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலக்கட்டத்தில் மீண்டும் அழகிரிக்கு ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் ரீஜினல் லெக்சரர் பதவி கிடைத்தது. பசுமலையில் தங்கி போர் ஆதரவு பிரச்சாரக் கூட்டங்களில் போர் பற்றி பேசாமல் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்தார்.

ஏதிரானவர்கள் சென்னை கவர்னருக்கு புகார் அனுப்பினார்கள். கவர்னர் விசாரனை வந்தது. ராணுவத்துக்கு ஆள் சேர்க்காமல் சுயமரியாதை பிரச்சாரம் செய்வதாக புகார் வருகிறதே ? என்று கேட்க. என் பிரச்சாரத்தால் பட்டாளத்துக்கு ஆள் சேருகிறார்களா என்று மட்டும் பாருங்கள். பேச்சை பார்க்காதீர்கள் என்றார் அழகிரி. உங்களை எச்சரித்து அனுப்புகிறேன் என்றார் கவர்னர். நான் தவறு செய்யவில்லை உங்கள் மன்னிப்போ. எச்சரிக்கையோ வேண்டாம். இந்த வேலையும் வேண்டாம் என்று ராஜினாமா கடிதம் கொடுத்து வெளியேறிவிட்டார்.

            சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தானில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு போனபோது மாப்பிள்ளை ஊர்வலத்தில் ராஜரெத்தினம் பிள்ளையின் நாதஸ்வர நிகழ்ச்சி வந்தது. கூடியிருந்த கூட்டம் ராஜரெத்தினம் பிள்ளையின் தோல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வாசிக்கச் சொன்னது. தனியாக வந்த கனீர் குரலொன்று ராஜரெத்தினம் பிள்ளை தோல் துண்டை எடுக்காதீர்கள் என்று கேட்டது. ஓட்டுமொத்த கூட்டமும் அந்த திசை நோக்கியது அந்த குரல் அழகிரியிடமிருந்து வந்து கொண்டிருந்தது. யாரும் சுயமரியாதை இழக்க கூடாது என்பதில் அக்கரையுடன் செயல்பட்டார்.

            தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது ராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து தஞ்சை முதல் சென்னைவரை நடைபயண இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார். சென்னையில் பெரியார் வரவேற்று விழா நடத்தினார்.

            அவர் எத்தனை சமூகப் பணி புரட்சி செய்தாலும் அவரை காசநோய் பிடித்துக் கொண்டது. திருவாரூரில் சுயமரியாதை கூட்டத்தில் கனல் பேச்சுக்களை பேசிக்கொண்டிருந்த போது காசநோயின் தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். பேச்சை கேட்ட கூட்டம் ஓடி போய் தூக்கியது தூக்கிய கூட்டத்தில் ஒரு சிறுவனும் உண்டு. அந்த சிறுவன் காசநோயாளியான நீங்க ஆவேசமாக பேசலாமா என்று கேட்க. என்னை விட இந்த நாடு நோயாளியாக உள்ளது முதலில் அதை சரிப்படுத்தத்தான் பேசுகிறேன் என்று அந்த சிறுவனிடம் பதில் சொன்னார். அன்று முதல் அழகிரியின் பேச்சுக்களை விடாமல் கேட்கத்தொடங்கினார் அந்த சிறுவன். அந்த சிறுவன்தான் இன்றைய முதல்வர் கலைஞர்.

            தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவும் பிரிந்து விட்ட காலம் அழகிரிக்கு காசநோய் அதிகமானது.
திராவிடர் கழக வரலாறு என்பது தந்தைபெரியாரின் தலைமையில் கல்லடியும் சொல்லடியும் பெற்ற வீர மறவர்களை கொண்ட வரலாறு .இந்த வீர மறவர்களின் வரிசையில் வந்த ஒருவர்தான் சுயமரியாதை இயக்க சுடொரொளி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள், பெரியாரின் போர்வாளாக இருந்த அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி மிக ஆவேசமாக, கோபம் கொப்பளிக்க பேசக் கூடியவர் .


            பெரியாரின் போர்வாளாக திகழ்ந்த அழகிரி அய்யா அவர் கள் தஞ்சைமாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்,அவர் பெரியாருடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டவர், வாழ்நாள் முழுவதும் கடவுள்
,மதம்,சாதி எதிர்ப்புணர்விலும் ,சுயமரியாதையை கடைபிடிப்பதிலும் தீவிரமாக இருந்தவர்
            1948 ல் சேலம் திராவிடர் கழக மாநாட்டில் உடல் நலிவுற்ற நிலையிலும் கலந்து கொண்டார்,அந்த மாநாட்டிற்கு வந்த கலைவானர் என்.எச்.கிருட்டிணனிடம் என்னப்பா கிருட்டினா,எனக்கும் உடல்நிலை மிகவும் கெட்டுவிட்டது,நான் சாவதைப்பற்றி கவலைப்படவில்லை ,ஆனால் ஏகப்பட்ட கடனையெல்லாம் என் குடும்பத்திற்கு வைத்துவிட்டு போகிறேன் என்று தான் வருத்தம், எனக்கு பின்னால் அந்த கடனை அடைத்து விட்டால் தேவலாம் என்று நினைக்கிறேன், அதை நீ செய்வாயா? கிருட்டினா என்று கேட்டிருக்கிறார். அதை கேட்ட கலைவாணர் உருகி என்ன அண்ணே, கடனைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம் எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்,

            1948 ல் ஈரோட்டில் அக்டோபர் 23,24 கலந்து கொண்ட மாநாட்டில் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த அழகிரி அவர்கள் நான் கலந்துகொள்ளும் கடைசி மாநாடு இது தான் என்று நினக்கிறேன் என்று கூறிய போது அங்குள்ள தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் கண் கலங்கினர்,
            மாநாடு முடிந்து பட்டுக்கோட்டை வந்த அழகிரி சொன்னது போலவே படுக்கையில் விழுந்தார். அதை அறிந்த அன்றைய திராவிட கழக தளபதி பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். உடனே கழக முன்னோடி கே.ஏ.மதியழகனிடம் 600 ரூ கொடுத்து அழகிரியை சென்னை வரவழைத்து மருத்துவர் சந்தோசத்திடம் காட்டினார். அவருடைய ஏற்பாட்டினால் தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அன்றைக்கு அந்த நோய்க்கான மருந்தை பிரான்சு தலைநகர் பாரிசிலிருந்து வரவ்ழைத்து சிகிச்சை அளித்தனர், உடல்நிலை சற்று தேரியவுடன் மருத்துவர் சந்தோசம் உதவியாளர் மருத்துவர் இராசமாணிக்கத்தை தொடர்வண்டி மூலம் தஞ்சைக்கு அனுப்பி வைத்தார். அப்போது அண்ணா சென்னையில் இல்லை, வெளியூர் சென்று வந்தவரிடம் அழகிரி தொடர்வண்டியில் கிளம்பிவிட்டார் என்பதை கேட்டு அறிந்து உடனே மகிழுந்தில் செங்கல்பட்டு வரை சென்று தொடர்வண்டிநிலையத்தில் சந்தித்தித்தார். அப்போது இருவரும் கட்டிப்பிடித்து அழுதனர், இருவரும் கண்ணீர் சிந்தினர், அப்போது அண்ணா அவர்கள் 400 ரூபாயை கையில் கொடுத்தார். அப்போது அழகிரி "அண்ணாதுரை உன்னை பற்றி நான் தவறாக கணித்திருந்தேன். ஒரு கட்சிகாரனுக்கும் மனிதாபிமானம் உண்டு என்பதை நிரூபித்துவிட்டாய் என்று கூறினார். நீ செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார். அண்ணா அதோடு சும்மா விடவில்லை என்னை யார் எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் அழகிரியார் அவரகளுக்கு 100 ரூ மனியார்டர் அனுப்பிய படிவத்தை காட்டினால் தான் வருவேன் என்று கூறினார். அதற்கு அழகிரி அந்த உதவியை மறுத்துவிட்டார்,கட்சிக்கு உழைப்பது என்னுடைய கடமை அதைதான் நான் செய்தேன். இந்த கடைசிகாலத்தில் எனக்கு இந்த உதவிகள் வேண்டாம் என்றார். சமூதாயத்தினை திருத்துவதற்காக பல பிரச்சைனைகளை எதிகொண்ட இந்த வீர மறவர் 28.3.1929 செவ்வாய் மதியம் 2 மணிக்கு இயற்கை எய்தினார்

            பின்னர் கலைவானர் அவர்கள் அழகிரியின் மூத்த மகனை இராமமூர்த்தியை அழைத்து எவ்வளவு கடன் என்று கேட்டார்? அந்த கடன்களையெல்லாம் கலைவாணர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி கடனை அடைத்தார். ஒரு ஆதி திராவிட (பழந்தமிழர்கள்)தோழர் மட்டும் கடனை திரும்ப வாங்க மறுத்துவிட்டார் இதற்கு அவர் , இந்த பகுத்தறிவாளர்க்கு நான் செலுத்திய மரியாதை என்று கூறினார். அழகிரி நினைவுநாளில் அவரது குடும்பத்திற்கு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், குத்தூசி குருசாமி, கலைஞர், குடந்தைசாமி, எச்.வி.லிங்கம் ,டி.கே.சி, நாவலர், குடந்தை மற்றும் பலர் கல‌ந்து கொண்டு நிதி உதவி அளித்தனர்,

            அஞ்சாநெஞ்சன் அழகிரியின்பால் தான் கொண்ட அன்பால் ஈர்க்கப்பட்ட பேச்சால் தான் வளர்ந்து நிற்கிறேன் என்ற கலைஞர் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார். மேலும் எம்.ஜி.ஆர் பிரிந்து சென்ற காலத்தில் தான் முதல்வாரன போது தன் சொந்த செலவில் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் அழகிரியின் சிலையை பட்டுக்கோட்டையில் நிறுவினார். அதன் பிறகு கடந்த 2007ம் ஆண்டு பட்டுக்கோட்டையில் அவர் வாழ்ந்த இடத்தில் நினைவு மணிமண்டபம் கட்ட நிதியும் ஒதுக்கி உள்ளார்.

            அழகிரி இறந்தபோது தந்தை பெரியார் வெளியிட்ட விடுதலை அறிக்கையில் நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். 30 ஆண்டு கால நண்பரும் மனப்பர்வமாக நிபந்தனை இன்றி பின்பற்றிவருகிற ஒரு கூட்டுபணியாளருமாவார். 30 ஆண்டுகளில் என் கொள்கை, திட்டத்தில், ஆலோசனையில் தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கை வைத்து தொண்டாற்றியவர்.

            அவரது முழு வாழ்க்கையிலும் இயக்க தொண்டு தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. போதிய பணம் இல்லை. விளையாட்டுக்கு கூட கொள்கையை விலைபேசி இருக்கமாட்டார் என்று கூறி இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக